ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வீரமணிதான் வேப்பங்காயா?

வீரமணிதான் வேப்பங்காயா?

அப்பா: நம்ம வீரமணிக்கு பெரியார் விருது கொடுக்கிறாங்களாமே?

மகன்: எந்த வீரமணி...? 'ஜெயலலிதாவிடம் அஞ்சு லட்சம் வாங்கி பெரியார் கொள்கையை வித்துட்டதாக' அப்போ சொன்னாரே கலைஞர்... ஓ...'ட்ரஸ்ட் வீரமணி' என்று சொல்ல வேண்டியதுதானே?

--குறுஞ்செய்தி (SMS)மூலமாக பரப்பப்படுகின்ற அயோக்கியத்தனமான பிரச்சாரம் இது.
____________________________________________

இது ஏதோ திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எதிரான பரப்புதல் போலத் தோன்றும். ஆனால், இது உன்மையில் பெரியாருக்கு... பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக விஷம் கக்கும் நச்சு விரியன் பாம்புக்குட்டிகளான பார்ப்பனர்களின்... பார்ப்பான்களின் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் சில மூட்டைப் பூச்சிகளின் ஆத்திரமே!மேலோட்டமாகப் பார்க்கும்போது இதுகளெல்லாம் பெரியாரின் கொள்கைகளுக்காகத் துடியாய்த் துடிப்பது போலத் தோன்றும்.
பெரியார் கொள்கைகளுக்கு வெடி வைக்க முயன்று...முயன்று... தோற்றுப் போகும் அதே விரியன் பாம்புக் குட்டிகளும், மூட்டைப் பூச்சிகளும்தான் இவை என்பது பெரியார் லென்சில் (பகுத்தறிவு) பார்க்கும்போது எளிதில் புரிந்துவிடும்.

இதிலும்கூட இவர்களின் அறிவு நாணயத்தைப் பாருங்கள்; பெரியாரின் கொள்கைகளைப் பரப்புகின்ற 'பெரியார் சுயமரியாதை இயக்கப் பிரச்சார நிறுவனம்' என்னும் அறக்கட்டளைக்கு 'அ.தி.மு.க அறக்கட்டளை' கொடுத்தத நன்கொடையை 'பெரியார் ட்ரஸ்ட்டின் தலைவர்' என்னும் முறையில் வாங்கி, அதை பைசா சேதாரம் இல்லாமல் அறக்கட்டளைக் கணக்கில் சேர்த்துவிட்டார் நேர்மைமிகு தமிழர் தலைவர் கி.வீரமணி.
இந்த உண்மை
பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்குத் தெரியும்;
கலைஞருக்கும் தெரியும்;
பார்ப்ப விரியன் பாம்புக் குட்டிகளுக்கும் தெரியும்;
துரோகிகளான மூட்டைப் பூச்சிகளுக்கும் தெரியும்.
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் தாம் பி.ஜே.பி யோடு போனதை பாலன்ஸ் பண்றதுக்காக அப்படி ஒரு பழியைத் தூக்கிப் போட்டார்... அது அவரின் அரசியல். அதே பழியைப் பார்ப்பன விரியன் பாம்புக்குட்டிகள் சொன்னது திராவிடர் கழகத்தை... வீரமணியை... வீழ்த்திவிட முடியாதா என்கிற கீழரிப்பில்;
இந்த மூட்டைப் பூச்சிகளுக்கு என்ன வந்தது? உண்மையான பெரியாரின் தொண்டர்களுக்குள் குழப்பத்தை உண்டாக்கினால் லிட்டர் லிட்டராய் உறிஞ்சிக் குடிக்கலாமே என்ற முட்டாள்தனமான... அயோக்கியத்தனமான... கடைவாயில் ஒழுகும் நப்பாசையன்றி வேறென்ன?
இந்த யோக்கிய சிகாமணிகள்தான் இன்று சொல்கின்றனர் 'கலைஞர் சொன்னாரே..' என்று! கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா இது?

பெரியாருக்கு பார்ப்பனர்களின் எதிர்ப்பைவிட பார்ப்பன பாதந்தாங்கிகள்...
சுருட்ட நினத்த சுய நலப் பேர்வழிகள்... கொடுத்த தொல்லைகள்தான் அதிகம்.

மானமுள்ள வீரமணி அவர்களுக்கும் அதே தொல்லைகள்.

திருந்த மறுக்கும் கோடரிக் காம்புகளான இந்த மூட்டைப் பூச்சிகளை எண்ணி வருந்தினாலும்,
அச்சுப் பிறழாமல் பெரியாரின் வழியில் கொள்கை மான நடை போடுகிறார் தமிழர் தலைவராய் தலை நிமிர்ந்துள்ள மானமிகு கி. வீரமணி.

இரை கிடைக்காததால் பார்ப்பன விரியன் பாம்புகளுக்கும் துரோக மூட்டைப் பூச்சிகளுக்கும் குடல் கருகத்தானே செய்யும்?
ஆத்திரம் ஆத்திரமாய் வரத்தானே செய்யு்ம்?

வீரமணி மட்டுமல்ல; இதுகளுக்கு பெரியாரும் வேப்பங்காய்தான்.

பால்தாக்கரே, காமடியனா? வில்லனா?

பால்தாக்கரே, காமடியனா? வில்லனா?


'இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமென்றால், வந்தேமாதரம் பாடலை ஏற்றுக் கொள்ள வேண்டும்; (இஸ்லாமியர்களை வெட்டு, குத்து, கொல்லு என்று கூறும் வன்முறைப் பாடல்களைக் கொண்டது வந்தே மாதரம்.) பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் கட்ட ஒப்புக் கொள்ள வேண்டும்; இன்னும் பொது சிவில் சட்டம் அது இது' என்று பட்டியலை நீட்டி முழக்குகிறார் பால்தாக்கரே என்னும் ஓய்வு பெற்ற அரசியல் பயங்கரவாதி.

இந்த உத்தரவுகளையிட யாரிவர்?

இந்திய நாட்டின் சர்வாதிகாரியா?

இந்திய நாட்டின் தாதா ரவுடியா?

இல்லை, நம் தமிழ் நாட்டின் கோமாளிகள் சோ, சூனா சாமி போன்ற காமெடியனா?

அது என்ன சங்பரிவார் குஞ்சுகள் என்றாலே கோமாளித்தனமான ரவுடிகள்தானா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பதையே என்னவென்று தெரிந்து கொள்ளாத இவர்களெல்லாம் என்ன வகை அரசியல்வாதிகள்?

இந்திய அரசியல் சட்டத்தில் நியாயமாக இருக்க வேண்டிய... சேர்க்கப்பட வேண்டியவை இதோ...

1) இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டுவோர் தேசத் துரோகிகள்.

2) சக மனிதர்களை இழிவுபடுத்துகிற ஜாதிகளை 'இந்து மதத்திலி'ருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். ("இந்து மதம்" என்பதே வெள்ளைக்காரன் போட்ட அடையாளம்.)

3) உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூனூலை அகற்ற வேண்டும்

இந்த நியாயமான மனித நேயச் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள சிவ சேனா, சங்பரிவார் வகையறா முன் வர வேண்டும்.

இத்தகைய சமத்துவ மனித நேயச் சிந்தனைகள்தாம் வலிமையான இந்தியாவை உருவாக்கும்.